• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பத்தரமுல்லை "அபே கம" மனையிடத்திலுள்ள காணித் துண்டொன்றை "அமரதேவ அசப்புவ" நிருமாணிக்கும் பொருட்டு குறித்தொதுக்குதல்
- புகழ்பெற்ற கலைஞர் பண்டதர் டபிள்யு.டி.அமரதேவ அவர்களினால் இலங்கை இசைத்துறைக்கு ஆற்றப்பட்ட ஒப்பற்ற பங்களிப்பை கவனத்திற் கொண்டு, எதிர்கால சந்ததியின் நன்மை கருதி அவரின் இசை உருவாக்கங்களையும் இசைப்பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பொருட்டு "அமரதேவ அசப்புவ" தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆதலால், "அமரதேவ அசப்புவ" நிருமாணிக்கும் பொருட்டு பத்தரமுல்லை "அபே கம" மனையிடத்திற்குள் அமைந்துள்ள 100 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட காணியினை குறித்தொதுக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.