• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நான்காவது ஆசிய தேர்தல் தரப்பினர்களின் மாநாடு - 2018
- ஆசிய பிராந்திய நாடுகளில் பொது தேர்தல்களுடன் தொடர்புபட்ட பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் பொருட்டும் அத்தகைய நாடுகளில் சட்டவிதி தாபிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் பொருட்டும் பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்கள் கருத்திட்டங்களை அமுலாக்கம் செய்வதில் ஈடுபட்டுள்ள அரசசார்பற்ற நிறுவனமொன்றே சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பாகும். மேற்போந்த வலையமைப்பின் மூலம் ஒழுங்குபடுத்தப்படும் நான்காவது ஆசிய தேர்தல் தரப்பினர்களின் மாநாட்டினை 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவதற்கான இணை அனுசரணையை ஏற்பதற்கு இலங்கை தேர்தல் ஆணைக்குழு உடன்பட்டுள்ளது.

இலங்கையின் தேர்தல் செயல்முறையில் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கென தேர்தல் செயல்முறையில் நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பந்தப்படும் அரசாங்க அலுவலர்களினதும் ஏனைய தரப்பினர்களினதும் அறிவினைப் மேம்படுத்துவதற்கும் ஆசிய பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் அனுபவங்களை பகிர்ந்தும் தேர்தல் செயல்முறையினை வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் நடாத்தும் பொருட்டு தேவையான நிறுவன ரீதியான திறன்களை விருத்தி செய்து கொள்வதற்குமான சந்தர்ப்பம் இந்த மாநாட்டை இலங்கையில் நடாத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும். அதற்கிணங்க, நான்காவது ஆசிய தேர்தல் தரப்பினர்களின் மாநாட்டினை 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவது மற்றும் அதன் இணை அனுசரணையை ஏற்பது சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கும் சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலையமைப்புக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.