2017-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெருந்தோட்டத் துறையின் செயல் திறனுக்காக 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு முன் மொழியப்பட்டுள்ள புதிய கருத்திட்டங்கள் - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் விடய நோக்கெல்லையின் கீழ் தொழிற்பட்டுவரும் இறப்பர் ஆராய்ச்சி நிறுவகம், தெங்கு பயிர்ச்செய்கைச் சபை, தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம் மற்றும் 'துருசவிய' நிதியம் ஆகியவற்றின் மூலம் பெருந்தோட்டத் துறையின் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கும், பிரேரிக்கப்பட்ட 10 கருத்திட்டங்களின் அமுலாக்கம் கருதி பொதுத் திறைசேரியிடமிருந்து 730 மில்லியன் ரூபா தொகை கொண்ட நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |