• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடுத்தர வருமான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பிலான துரித நிகழ்ச்சித் திட்டம்
- நகர மற்றும் பகுதியளவு நகர பிரதேசங்களில் அதிவேக பாதைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரத வழிகள் ஆகியவற்றைச் சுற்றி மையப்படுத்தப்பட்ட நடுத்தர வருமான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பிலான துரித நிகழ்ச்சித் திட்டமானது 'நடுத்தர வருமான கூலி உழைப்பாளர்கள்' சார்பில் வீடமைப்பை வழங்கும் குறிக்கோளுடன் தனியார்துறை பங்களிப்புடன் சேர்த்து அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாத்துவ, ஹோமாகம, ஜல்தர மற்றும் இராகமை ஆகிய நகரங்களுக்கு சமீபமாக இவ்வகையான நான்கு கருத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதே போன்று சில கூடுதல் கருத்திட்டங்களானவை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட எதிர் பார்க்கப்படுகின்றது.

அதற்கிணங்க, எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பொருட்டு பிரேரிக்கப்பட்ட வீடமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்கள் சார்பில் கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், மாத்தளை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான சில காணித் துண்டுகளை தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு உரித்தளிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.