2017-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல் - காலி, இரத்தினபுரி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் 2017 ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 457.37 ஹெக்டெயர் விஸ்தீரணம் கொண்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பயிரிடப்பட்ட காணிகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 1823.10 ஹெக்டெயர்கள் பகுதியளவில் சேதமடைந் துள்ளன. ஆதலால், சேதமடைந்த சிறு தேயிலைத் தோட்டங்களை மீளப் பயிரிடுவதற்குத் தேவையான பயிர்கள் மற்றும் உரம் ஆகியவற்றை வழங்கும் பொருட்டும் பாதிக்கப்பட்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நிதி உதவியினை வழங்கும் பொருட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் சார்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|