2017-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1958 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டங்கள் (துண்டாடுதலைக் கட்டுப்படுத்தும்) சட்டத்தை திருத்துதல் - விஸ்தீரணத்தில் 04 ஹெக்டயார்களுக்கு குறையாத தென்னங் காணிகளையும் 20 ஹெக்டயார்களுக்கு குறையா தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுடனான காணிகளையும் துண்டாடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் 1958 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டங்கள் (துண்டாடுதலைக் கட்டுப்படுத்தும்) சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக இத்தகைய காணிகளை துண்டாடும் போது அல்லது தனி அலகொன்றாக உடைமையாக்கும் போது தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டங்களை துண்டாடுதலைக் கட்டுப்படுத்தும் சபையினால் வழங்கப்படும் இசைவாக்க சான்றிதழைப் பெற்றுக் கொள்தல் வேண்டும். பல்வேறுபட்ட பாரிய அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு இந்தக் காணிகளை பயன்படுத்தும் போது நெகிழ்ச்சிப் போக்கு இருப்பது காலத்தின் தேவையாகும். இதற்கமைவாக வர்த்தக நோக்கங்களுக்காக தென்னங் காணிகளை துண்டாடுதல் அல்லது தனி அலகொன்றாக உடைமையாக்குதல் தொடர்பிலான வரையறையை 02 ஹெக்டயார்கள் வரையும் (05 ஏக்கர்), தேயிலை மற்றும் இறப்பர் காணிகளை துண்டாடுதல் அல்லது தனி அலகொன்றாக உடைமையாக்குதல் தொடர்பிலான வரையறையை 08 ஹெக்டயார்கள் வரையும் (20 ஏக்கர்), குறைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1958 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டங்கள் (துண்டாடுதலைக் கட்டுப்படுத்தும்) சட்டத்தை திருத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |