• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சின்கீழ் உள்ள நிறுவனங்களுக்கு வாகனங்கள் மற்றும் இயந்திரசாதனங்களை வழங்குதல்
- வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம், தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம் ஆகியவற்றின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், இந்த நிறுவனங்களுக்கு அத்தியாவசியமான வாகனங்களையும் இயந்திர சாதனங் களையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2018 ஆம் 2019 ஆம் ஆண்டுகளில் இதற்காக நிதி ஏற்பாடுகளை வழங்குவதற்கும் இதன் ஆரம்ப நடவடிக்கையாக 2018 ஆம் ஆண்டில் 500 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை வழங்குவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.