• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுர்த்தி நலன்கள் நீக்கியுள்ளதாக செய்யப்படும் உண்மைக்குப் புறம்பான பிரசாரம்
- சில சமுர்தி பயனாளிகளுக்கான சமுர்தி கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரசுரிக்கப்பட்டுள்ள உண்மைக்குப் பறம்பான ஊடக செய்திகள் காரணமாக இது தொடர்பில் பிழையான கருத்து பொது மக்களிடையே உருவாகியுள்ளது. சமுர்தி பயனாளிகள் எவருடைய கொடுப்பனவுகளும் இடைநிறுத்துவதற்கோ அல்லது நீக்குவதற்கோ அரசாங்கம் தீர்மானிக்கவில்லையென்பதோடு, இது பற்றி அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளமையும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.