• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலவும் கடும் வறட்சி மிக்க நிலமை காரணமாக ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் தீ பற்றுவதை தடுத்தலும் வன விலங்குகளுக்கு நீர் வழங்குதலும்
- இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சி மிக்க நிலமை காரணமாக உணவு மற்றும் நீர் பற்றாக்குறையினால் வனவிலங்குகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதோடு, ஒதுக்கப்பட்ட வனப் பிரதேசங்களில் ஏற்படக்கூடிய தீ காரணமாக இந்த வன விலங்குகளின் இருப்பிடம் இல்லாமற்போகும் அச்சுறுத்தலும் எழுந்துள்ளது. ஆதலால், ஒதுக்கப்பட்ட வனப் பிரதேசங்களில் தீ ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வதற்கும் வன விலங்குகளுக்கு நீர் வழங்குவதற்குமாக 10 Tractor Bowser களை வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.