2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை கோள்மண்டல நிலையத்தின் நவீனமயப்படுத்தல் வேலைகள் - உலகின் பாரிய கோள்மண்டல நிலையங்களுள் ஒன்றான இலங்கை கோள்மண்டல நிலையமானது 23 மீற்றர் விட்டம் கொண்ட கவிகை மாடத்துடனும் ஒரே தடவையில் 500 பேர்களுக்கு இருக்கை வசதிகளும் கொண்டதாகும். 1965 ஆம் ஆண்டில் முன்வார்ப்பு கொங்கீறிட் நிருமாணிப்பு தொழினுட்பத்தைப் பயன்படுத்தி நிருமாணிக்கப்பட்டுள்ள இந்த கோள்மண்டல கட்டடமானது அண்மைக்காலமாக நவீனமயப்படுத்தப்படவில்லை. இதற்கமைவாக அதன் கவிகைமாடம் மற்றும் அதுசார்ந்த பகுதிகளில் செய்யப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ள திருத்த வேலைகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |