• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்திற்கு அருகில் விமான நிலைய ஹோட்டலொன்றை நிருமாணித்தல்
- விமான பயணிகளுக்கும் உல்லாசப் பயணிகளுக்கும் மிகச் சிறந்த சேவையொன்றை ஏற்பாடு செய்யும் நோக்கில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள விமான நிலையங்கள், விமான சேவைகள் கம்பனிக்கு சொந்தமான இரண்டு காணித் துண்டுகளில் ஆகக்குறைந்தது 100 அறைகளைக் கொண்ட இரண்டு நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களை நிருமாணித்து நடாத்திச் செல்வதற்கு இரண்டு முதலீட்டாளர்களுக்கு காணித் துண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயினும், இதில் ஒரு முதலீட்டாளர் அவருடைய பிரேரிப்புக்கு அமைவாக தொடர் நடடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளமையினால் குறித்த காணித் துண்டில் விமான நிலைய ஹோட்டலொன்றைத் தாபித்து நடாத்திச் செல்வதற்காக பொருத்தமான வேறு முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு பிரேரரிப்புகளை அழைக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.