• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கூரைமீது பொருத்தும் சூரிய மின்கல தொகுதியின் மூலம் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
- 2020 ஆம் ஆண்டளவில் 200 மெகாவொட் மின்சாரத்தை சூரிய சக்தியின் ஊடாக பிறப்பித்துக் கொள்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாவதோடு, 2025 ஆம் ஆண்டளவில் இதனை 1,000 மெகாவொட் வரை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குறியிலக்கை அடைவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் "சூரிய பல சங்கிராம" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கூரைகளின் மீது பொருத்தும் சூரிய மின்கல தொகுதி சார்பில் சலுகைக் கடன் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்தாசை நல்கும் விதத்தில் சூரிய மின்கல தொகுதிகளுக்கான சந்தை உட்கட்டமைப்பு வசதிகளின் விருத்தி, கடன் பெற்றுக் கொள்ளக்கூடிய துணைக் கருத்திட்டங்களைத் தயாரித்தல், வர்த்தக மற்றும் வீட்டு நுகர்வோர்கள் அடங்கலாக சகலரதும் அறிந்து கொள்ளல் உட்பட ஆற்றலை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் சலுகை கடன் உதவிகளை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, அதற்காக இணக்கப்பேச்சுகளை நடாத்துவதற்கும் உரிய கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.