• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலவும் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- தற்போது நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலைமையினால் 17 மாவட்டங்களில் சுமார் 500,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்தப் பிரதேசங்களிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு இது கடும் தாக்கம் செலுத்தியுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு முன்னைய ஆண்டுகளில் வறட்சி அனர்த்த நிலைமையின் போது செயற்பட்டவாறு வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.