2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முன்பள்ளி கல்வியின் ஊடாக நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒழுக்கநெறிகள் மற்றும் உளரீதியான அறிவுபூர்வம் மிக்க விழுமியங்களை அபிவிருத்தி செய்தல் - இனம், மதம், பால்நிலை போன்ற சமூக பன்முகத்தன்மைக்கு ஏற்ப ஒழுக்க நெறிகளைக் கொண்ட எதிரகால சந்ததியொன்றை உருவாக்கும் நோக்கில் முன்பள்ளி பாடசாலை பிள்ளைகளின் வாழ்க்கை திறன்களை வளர்ப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, முன்பள்ளி பாடசாலை பிள்ளைகளுக்கு ஆள் மற்றும் சமூக விழுமியங்கள் பற்றிய புரிந்துணர்வினை வழங்கும் நடைமுறை செயற்பாடுகளுடன் வாரமொன்றுக்கு 1/2 மணித்தியாலம் வீதம் பாடநெறியொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினாலும் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |