• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாராஹேன்பிட்ட புதிய நகர அபிவிருத்தி கருத்திட்டம் - கிரிமண்டல மாவத்தை
- நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக, வதிவிட, வர்த்தக, ஓய்வு, களியாட்ட நடவடிக்கைகள் உட்பட பொது வசதிகள் கொண்ட முழுமையான நகர பிரதேசமொன்றாக கொழும்பு, நாராஹேன்பிட்ட கிரிமண்டல மாவத்தை சார்ந்த பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த பிரதேசத்திலுள்ள பல்வேறுபட்ட அரசாங்க நிறுவனங்களினால் உரிமை கொண்டாடும் காணிகளை பயன்படுத்துவதற்கும் அதற்காக மாற்று காணிகளை உரிய அரசாங்க நிறுவனத்துக்கு வேறு பிரதேசத்திலிருந்து ஒதுக்குவதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.