2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நுவரெலியா குதிரைப் பந்தய விளையாட்டு மைதானத்தை குத்தகைக்கு வழங்குதல் - சுகததாச தேசிய விளையாட்டு கட்டடத் தொகுதி அதிகாரசபையின் மூலம் நிருவகிக்கப்படும் நுவரெலியா குதிரைப் பந்தய விளையாட்டு மைதானமானது குதிரைப் பந்தய போட்டிகளை நடாத்தும் நோக்கத்திற்காக மூன்றாம் தரப்பொன்றுக்கு தற்போது குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளதோடு, இந்த குத்தகை உடன்படிக்கையின் செல்லுபடியாகும் காலமானது 2017‑12‑31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்து முதலீட்டு நலன்களை ஈட்டிக்கொள்ளக்கூடிய விளையாட்டொன்றாக குத்திரைப் பந்தயங்களை நடாத்துவதை மேம்படுத்தலாமென்பதோடு, இதற்கமைவாக எதிர்வரும் பத்து (10) வருட காலத்திற்கு இந்த குதிரைப்பந்தய மைதானத்தை குத்தகைக்களிக்கும் பொருட்டு பொருத்தமான குத்தகைத்தாரர் ஒருவரை திறந்த கேள்வி கோருவதன் மூலம் தெரிவு செய்யும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |