2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலன்நறுவை மாவட்ட செயலகத்திற்கான நான்கு மாடி கட்டடத்தின் மீதி நிருமாணிப்பு பணிகள் - பொலன்நறுவை மாவட்ட செயலகம் சார்பில் நிருமாணிக்கப்படும் நான்கு மாடி கட்டடத்தின் முதலாம் கட்டத்திற்கான நிருமாணிப்பு பணிகள் இந்த வருட இறுதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படுவதோடு, அதற்கு ஒருங்கிணைவாக அதன் இரண்டாவது கட்டத்திற்கான நிருமாணிப்பு பணிகளும்கூட துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் நடாத்திச் செல்லப்படும் பொலன்நறுவை மாவட்ட செயலகத்தின் பல்வேறுபட்ட பிரிவுகளை துரிதமாக ஒரு இடத்தில் தாபிக்கும் தேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்தக் கட்டடத்தின் இரண்டாவது கட்டத்திற்கான நிருமாணிப்பு பணிகளுக்குரிய ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |