2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக தண்ணீர் பவுசர்களை கொள்வனவு செய்தல் - அடிக்கடி உருவாகும் வறட்சி நிலைமைக்கு முகங்கொடுக்கும் முறையான குழாய்நீர் வழங்கலின் மூலம் தழுவப்படாத உலர்வலய தூர பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான குறுகியகால தீர்வொன்றாக பவுசர்கள் மூலம் நீர் வழங்குவதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த நோக்கத்திற்குத் தேவையான 23 நீர் பவுசர்களை கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக கொள்வனவு செய்யும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |