• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்ட வீடமைப்பு கருத்திட்டங்களின் பயனாளிகளுக்கு காணி உரிமையையும் பொருத்தமான வீடுகளையும் வழங்குதல்
- மிகக்குறைந்த வசதிகளுடன் கூடிய சிறிய வீடுகளில் வசிக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு வசதிகளை செய்யும் நோக்கில் 07 பேர்ச்சர்ஸ் வீதம் காணித் துண்டு சார்பில் உரிமையினை வழங்கும் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நுவரெலியா, பதுளை, கேகாலை உட்பட பல மாவட்டங்களில் 2010 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதிக்குள் பல்வேறுபட்ட வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் பெருந்தோட்ட மக்கள் சார்பில் நிருமாணிக்கப்பட்ட வீடுகளுக்கான உரித்து உறுதிகளை வழங்குவதற்கு உரியதாக தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டம் மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அமைச்சரவையினால் இந்த திட்டமானது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.