• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதித்துறை சட்டத்தைத் திருத்துதல் (உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்)
- நாட்டின் நீதிமன்ற முறைமையினுள் வழக்குகளை தீர்ப்பதற்குரியதாக காணக்கிடைக்கும் தாமதங்களைக் குறைத்து இந்த பணிகளை வினைத்திறனுடன் செய்யும் நோக்கில், உயர் நீதிமன்றங்கள் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 75 இலிருந்து 85 வரை அதிகரிக்கும் பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள நீதித்துறை(திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர், அங்கீகாரத்திற்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.