2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை பிரசைகளுக்கு மின்னணு கடவுச்சீட்டொன்றை (e-Passport) அறிமுகப்படுத்துதலும் வழங்குதலும் - கடவுச்சீட்டுகளில் தயாரிக்கும் செயற்பாட்டிற்கு உயிரியல் அடையாளங்களை உள்ளடக்குவதனை அறிமுகப்படுத்துதலுக்கு ஒருங்கிணைவாக குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் மின்னணு கடவுச்சீட்டொன்றை (e-Passport) அறிமுகப்படுத்தும் தொடக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இது தேசிய டிஜிட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழும் அத்தியாவசிய அங்கமொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. இதன்போது உரிமையாளரின் உயிரியல் அடையாளங்களை உள்ளடக்கிய பாதுகாப்பான மின்னணு சிப்பொன்றுடனான மின்னணு வடிவத்திலான கடவுச்சீட்டொன்று வழங்கப்படும். இதற்கமைவாக, மின்னணு கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கும் வழங்குவதற்குமான கருத்திட்டத்தை உரிய ஆய்வொன்றின் பின்னர் அரசாங்க - தனியார் பங்களிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினாலும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |