• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் காலப்பகுதியை மீள் அட்டவணைப்படுத்தல்
- மாகாண சபை தேர்தலை சகல மாகாணங்களிலும் ஒரே தடவையில் நடாத்துவதற்காக நிலவிய வழிமுறைக்குப் பதிலாக கடந்த காலப்பகுதியில் காலத்திற்கு காலம் மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டதன் காரணமாக நிதி, மனிதவளம் உட்பட ஏனைய வளங்களின் பாரிய அளவிலான விரயம், பொது மக்களின் அன்றாட பணிகளுக்குத் தேவையான அரசாங்கத்தின் சேவை வழங்குவதில் தாமதம், நாட்டில் தேர்தல் சார்ந்த வன்முறைகள், தேர்தல் முறைக்கேடுகள் அரசாங்க சொத்துக்களின் முறையற்ற பாவனை அதிகரித்தல் போன்ற பிரதிகூலமான நிலைமைகள் பல எழுந்துள்ளன. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சகல மாகாண சபைகளுக்கும் உரிய தேர்தலை ஒரே நாளில் நடாத்துவதற்கு இயலுமாகும் வகையில் அரசியல் அமைப்பிலும் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் சட்டத்திலும் இதற்குரியதான ஏற்பாடுகளை திருத்தும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.