2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் சேவைகளை நடாத்திச் செல்வதற்குத் நிருவாக சபையை நியமித்தல் - அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தின் பிரகாரம் 2017 ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தல் மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையானது சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கு உடைமையாக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த வைத்தியசாலையை தரம் மிக்க நோயாளிகளுக்கான உயர் தரம் மிக்க சிகிச்சை சேவையினை வழங்கும் போதனா வைத்தியசாலையொன்றாக நடாத்திச் செல்வதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, இதற்கு இந்த வைத்தியசாலையை ஶ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலை தாபிக்கப்பட்டுள்ளவாறு பாராளுமன்ற சட்டமொன்றின் ஊடாக கூட்டிணைக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக, சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இவ்வாறு பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் இந்த வைத்தியசாலையை கூட்டிணைக்கும் வரை அதன் சேவைகளை நடாத்தி்ச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், அதன் நிருவாக மற்றும் முகாமைத்துவத்தின் பொருட்டு முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதிபதி மருத்துவர் (திரு) யு.ஏ.அஜித் மென்டிசின் தலைமைத்துவத்தில் மருத்துவ, நிருவாக, முகாமைத்துவ மற்றும் சிவில் சமூகத்ததை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களைக் கொண்ட நிருவாக சபையொன்றை 2017 ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக நியமிப்பதற்கும் 2017 ஆம் ஆண்டு சார்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டிற்குள் முகாமித்துக் கொண்டு, இந்த வைத்தியசாலையின் செயற்பாட்டு செலவுகளுக்காக மாதாந்தம் 200 மில்லியன் ரூபா வீதம் நிதி ஏற்பாடுகளை வழங்குவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |