• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீள் புதிப்பிக்கத்தக்க வலுசக்தியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மின்சார அனுப்பீட்டு வழிகள் அபிவிருத்திக் கருத்திட்டம் - நாவலப்பிட்டிய, இராகலை, வேவெல்வத்த மற்றும் மாலிபொட ஆகிய 4 புதிய துணை நெய்யறி மின் நிலையங்களை நிருமாணிப்பதற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்தல்
- எதிர்காலத்தில் பிரதான வலையமைப்புடன் சேர்க்கப்படவுள்ள சிறிய நீர்மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிரதான அனுப்பீட்டு முறைமையுடன் சேர்க்கும் பொருட்டு நாவலப்பிட்டிய, இராகலை, வேவெல்வத்த மற்றும் மாலிபொட ஆகிய பிரதேசங்களில் 04 புதிய துணை நெய்யறி மின் நிலையங்களையும் இதற்கான அனுப்பீட்டு கம்பிவழிகளையும் நிருமாணிப்பது அத்தியாவசியமானதாகும். இதற்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கேள்வி கோரப்பட்டதோடு, கிடைக்கப்பெற்றுள்ள கேள்விகளை மதிப்பிட்ட தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் உரிய ஒப்பந்த பொதிகள் ஒவ்வொன்றுக்குமான ஒப்பந்தங்களை கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.