• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபை சார்பில் அநுராதபுரம் நகரத்தில் அலுவலக கட்டட தொகுதியொன்றை நிருமாணித்தல்
- அநுராதபுரம், மைத்திரிபால சேனநாயக்க மாவத்தையிலுள்ள இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான காணியில் அலுவலக கட்டட தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம், ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள கேள்விதாரருக்கு 213.4 மில்லியன் ரூபாவுக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.