• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய உள்ளூராட்சி அதிகாரசபைகளைத் தாபித்தலும் தற்போதுள்ள உள்ளூரட்சி அதிகாரசபைகளை தரமுயர்த்துதலும்
- உள்ளூராட்சி அதிகாரசபைகளை புதிதாக தாபிப்பதற்கு அல்லது தற்போது நிலவும் உள்ளூராட்சி அதிகாரசபைகளை தரமுயர்த்துவதற்கு உரிய ஏற்பாடுகள் சட்டம் மூலம் சட்டமாக்கப்படாததோடு, இதற்காக இதற்கு முன்னர் பல்வேறுபட்ட தகுதிவிதிகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக முறையற்ற விதத்தில் தாபிக்கப்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபைகளை சுயாதீனமாக நடாத்திச் செல்வதற்குத் தேவையான பொருளாதார பின்னணி இல்லாததன் காரணத்தினால் அதற்கான செலவுகள் அரசாங்கத்தினால் ஏற்கவேண்டி வருகின்றதோடு, அத்தகைய உள்ளூராட்சி அதிகாரசபைகளிலிருந்து மக்கள் எதிர்பார்க்கும் சேவையையும் கூட வழங்குவதற்கு கடினமாகியுள்ளது.

1999 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட உள்ளூராட்சி மறுசீரமைப்பு தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளுக்கு அமைவாக உள்ளூராட்சி அதிகாரசபைகளை தாபித்தல் மற்றும் தரமுயர்த்துதல் தொடர்பில் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் 12 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மக்கள் தொகை, மக்கள் செறிவு, வீடுகளின் எண்ணிக்கை மற்றும் செறிவு, சேவை வழங்குகை, உட்கட்டமைப்பு வசதிகளின் விருத்தி, வர்த்தக மற்றும் கைத்தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம், தொழில் வாய்ப்பு மற்றும் உத்தேச அதிகாரசபையினது அதிகார பிரதேசத்தில் சுயமாக கிடைக்கும் வருமானம் போன்ற தகுதி விதிகளை அடிப்படையாகக் கொண்ட வழிமுறைக்கு அமைவாக மாத்திரம் எதிர்காலத்தில் புதிய உள்ளூராட்சி அதிகாரசபைகளை தாபிக்கும் அல்லது நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி அதிகாரசபையொன்றை தரமுயர்த்தும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.