• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடும் வரட்சி காரணமாக வனாந்தரங்களில் எழுந்துள்ள பாதகமான நிலைமைகளை கட்டுப்படுத்துதல்
- வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தற்போது நிலவும் கடும் வரட்சிமிக்க நிலைமை காரணமாக இந்த பிரதேசங்களுக்கு அண்மையில் அமைந்துள்ள வனாந்தரங்களில் தீ பரவுதல், வனசீவராசிகள் மரணித்தல், நீர் தேடி வனசீவராசிகள் கிராமங்களுக்குள் நுழைதல் போன்ற பாதகமான நிலைமைகள் உருவாகியுள்ளன. இந்த நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் ஏனைய அரசாங்க நிறுவனங்களின் உதவியினை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கமைவாக, வரட்சி நிலைமை காரணமாக வனாந்தரங்களில் உருவாகியுள்ள மேற்குறிப்பிட்ட பாதகமான நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கான உத்தேச செயற்பாடுகள் உரிய உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய பிரதேச குழுக்கள் மற்றும் மாவட்ட குழுக்கள் என்பவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.