• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பின்னவல யானைகள் சரணாலயம் அமைந்துள்ள காணியை தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்திற்கு உடமையாக்கிக் கொள்ளல்
- தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் 'பின்னவல யானைகள் சரணாலயம் ஆசிய நாட்டு யானைகளை பாதுகாக்கும் அத்துடன் இனவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய நிலையமொன்றாவதோடு, இது உள்நாட்டு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமொன்றுமாகும். இந்த யானைகள் சரணாலயத்தை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான இந்த சரணாலயம் அமைந்நதுள்ள ஏக்கர் 26 பேர்ச்சர்ஸ் 5.8 விஸ்தீரணமுடைய காணித்துண்டை தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்திற்கு நிரந்தரமாக உடமையாக்கிக் கொள்ளும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.