• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டினை வினைத்திறனுடனும் மிக பயனுள்ள வகையிலும் நிறைவேற்றுவதற்காக மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்தல்
– காலநிலை மாற்றம் காரணமாக இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போக்கு அதிகரித்துள்ளதோடு, இதற்கு ஒருங்கிணைவாக மனித செயற்பாடுகள் காரணமாக நிகழும் அனர்த்தங்களும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய அனர்த்த நிலைமைகளை முகாமித்தலானது வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் அமையும் பொருட்டு நீண்டகால திட்டத்தின் தேவை எழுந்துள்ளது. இதற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் தலைமையில் இந்த விடயம் சம்பந்தமான நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.