• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை தாதி பயிற்சி பாடசாலையில் கல்வி மற்றும் நிருவாக கட்டடத்தை நிருமாணித்தல்
– தரம் மிக்க சுகாதார சேவையொனறை வழங்கும் பொருட்டு தாதி பயிற்சிக்காக ஆட்சேர்ப்புச் செய்யப்படும் பயிலுநர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக, களுத்துறை தேசிய சுகாதார கல்லூரியில் கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் தற்போது நடாத்திச் செல்லப்படும் களுத்துறை தாதி பயிற்சி பாடசாலை சார்பில் கல்வி மற்றும் நிருவாக கட்டடமொன்றை புதிதாக நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதற்கான ஒப்பந்தத்தை 714.2 மில்லியன் ரூபாவை (வரியுடன்) கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.