• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மண்சரிவு மற்றும் வௌ்ள நிலமை காரணமாக பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
– 2017 மே மாதம் காலி, இரத்தினபுரி, கேகாலை, ஹட்டன் மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு நிலமை காரணமாக பெருந்தோட்டங்களை அண்டி வாழ்ந்த சுமார் 872 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, அவர்களுடைய சொத்துக்கள் பெரும்பாலனவை அழிவடைந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது தற்காலிக இடங்களிலும் பொது இடங்களிலும் வசிப்பதோடு, அவர்களை மீளக் குடியமர்த்தி சேதமடைந்துள்ள உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைக்கவேண்டியுள்ளது.

இதற்கமைவாக, 500 மில்லியன் ரூபா செலவில் இவர்களை மீளக்குடியமர்த்துவதற்குப் பொருத்தமான காணித் துண்டுகளை இனங்கண்டு புதிய வீடுகளை நிருமாணிப்பதற்கும் சேதமடைந்த ஏனைய வீடுகள் சார்பில் கூரைத்தகடுகளை வழங்குவதற்கும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட பிரதேசங்களில் மலசல கூடங்களை நிருமாணிப்பதற்கும் நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நீர் தாங்கிகளை வழங்குவதற்கும் பாதிக்கப்பட்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை விருத்தி செய்வதற்குமாக மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.