• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துதல்
– ஏதேனும் நீதிமன்ற வலயத்திற்கு நீதிமன்ற மாவட்டமொன்றுக்கு அல்லது பிரிவொன்றுக்கு சமாதான நீதவான்களை நியமிப்பதற்குப் பதிலாக நிருவாக மாவட்டம் சார்பில் சமாதான நீதவான்களை நியமிப்பது நடைமுறை ரீதியானதும் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளமையினால் இதற்கான ஏற்பாடுகளை செய்யும் நோக்கில் 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் 45 ஆம் பிரிவை திருத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள சமாதான நீதவான்கள் அவர்கள் உரிய நியமனங்களை பெறும் சந்தர்ப்பத்தில் குடியிருந்த பிரதேச செயலாளர் பிரிவுக்குச் சொந்தமான நிருவாக மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டுமென வௌிப்படுத்துவதற்கும் சமாதான நீதவான்கள் சம்பந்தமாக ஒழுக்க நெறிக் கோவையொன்றை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அவர்களுடைய சேவையை இடைநிறுத்துதல், இரத்துச் செய்தல் அல்லது முடிவுக்கு கொண்டுவருதல் தொடர்பிலான கட்டளைகளை ஆக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.