2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சாலாவ நகர மீள் அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக காணிகளை உடைமையாக்குதல் – கடந்த ஆண்டில் கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் காணியிலிருந்த ஆயுதக் களஞ்சியம் வெடித்ததன் காரணமாக அரசாங்க மற்றும் தனியார் சொத்துக்கள் பல சேதமடைந்தன இந்த வெடிப்பின் காரணமாக சேதமடைந்த கட்டடங்களையும் நகரத்தையும் மீளமைப்பதற்கு சிபாரிசுகளை முன்வைக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட 'விசேட குழுவினால்' சிபாரிசு செய்யப்ப்டுள்ளவாறு பின்வரும் கருத்திட்டங்களை துரிதமாக ஆரம்பிப்பதற்கு இலங்கை தரைப்படையின் உடன்பாட்டின் பிரகாரம் சாலாவ இராணுவ முகாம் காணியிலிருந்து ஏக்கர் 04 றூட் 02 பேர்ச்சர்ஸ் 24.40 விஸ்திரணமுடைய காணித் துண்டொன்றை நகர அபவிருத்தி அதிகாரசபைக்கு இறையிலிக் கொடையொன்றாக கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. * பிரதான வீதியை நான்கு பாதை வரிசைகளாக விரிவுபடுத்துதல். * வங்கிக் கிளைகள் சார்பில் காணியை ஒதுக்குதல். * சமூகநிலையமொன்றை நிருமாணித்தல். * வர்த்தக கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல். * 35 கடை அறைகளை நிருமாணித்தல். * சிறுவர் பூங்காவொன்றையும் மைதானமொன்றையும் நிருமாணித்தல். * உணவு விற்பனை நிலையங்களை நிருமாணித்தல். |