2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சாரதி உரிமப் பத்திரங்களை வழங்குவதற்குரிய செயல்முறை சார்ந்த பரீட்சைகளை தனித்தரத்துடனும் பயனுள்ள விதத்திலும் மேற்கொள்வதற்கான வழிமுறையொன்றை தயாரித்தல் – சாரதி உரிமப் பத்திரங்களை வழங்கும் போது அதற்குரிய செயல்முறை சார்ந்த பரீட்சைகளை நடாத்துவது தனித்தரப்பொன்றின் கீழ் செய்யப்படுகின்றமையினால் சில முறைக்கேடுகள் நிகழ்கின்றதாக பொதுமக்களின் கண்டனங்கள் எழுந்துள்ளதோடு, இந்த நிலைமை ஒழுக்கம் மிக்க சாரதிகளை உருவாக்குவதற்கு தடையாக உள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது நிகழும் வீதி விபத்துக்கள் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளும் போது சாரதிகளின் கவனமற்ற அத்துடன் வீதி சம்பந்தமான சட்டங்கள் தொடர்பில் அவர்களிடத்தில் காணப்படும் போதுமான அறிவு இல்லாமை மேற்போந்த நிலைமையை மேலும் உறுதி செய்கின்றது. இந்த நிலைமைக்கு மாற்று வழியாக குறித்த செய்முறைப் பரீட்சையை நடாத்துவதற்கு மோட்டார் வாகன பரிசோதகர்களுக்கு மேலதிகமாக பொருத்தமான வேறு தரப்பினர்களை இனங்காண்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தரம் வாய்ந்ததாக இந்த செய்முறை பரீட்சைகளை நடாத்துவதற்கும் சரியாக ஒழுங்குறுத்துவதன் மூலம் தாம் சித்தியடையச் செய்யும் சாரதி உரிமப்பத்திர அபேட்சகர்கள் சம்பந்தமான பொறுப்புக் கூறலை ஏற்படுத்துவதற்கும் இயலுமாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் சார்பில் பயன்படுத்தக்கூடிய பொருத்தமான வழிமுறையொன்று பற்றி ஆராய்ந்து சிபாரிசுகளுடனான அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |