2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வேமெடில்ல நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கடிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட காணிகள் மொறகஹகந்த திட்டத்திற்கென சுவீகரிக்கப்பட்ட மையினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு செலுத்துதல் – மாத்தளை மாவட்டத்தின் நாவுல, கலேவெல மற்றும் தம்புள்ளை பிரதேச செயலக பிரிவுகளை தழுவும் விதத்தில் செயற்படுத்தப்பட்ட வேமெடில்ல நீர்த்தேக்க கருத்திட்டத்திற்காக காணி சுவீகரிக்கப்படும் போது காணிகளை இழந்தவர்களுக்கு கன்தேபிட்டவல நீர்த்தேக்க திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டில் லக்கல - பல்லேகம பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து காணிகள் வழங்கப்பட்டது. ஆயினும் இவ்வாறு வழங்கப்பட்ட காணிகள் மொறகஹாகந்த - களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக மீண்டும் அரசாங்கத்திற்கு சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையினால் அவ்வாறு காணி இழந்த 53 பேர்கள் சார்பில் மாற்றுக் காணிகளுக்குப் பதிலாக பணமாக நட்டஈடு வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |