2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக பயன்படுத்தும் பொருட்டு பேரூந்துகளை கொள்வனவு செய்தல் – போக்குவரத்து கஷ்டங்களை குறைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்யும் தேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வடமத்திய மாகாணத்தில் 04 கஷ்ட பிரதேச கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களின் பயன்பாட்டுக்காக பயணிகள் போக்குவரத்து பேரூந்துகளை வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 'சிறுவர்களை பாதுகாப்போம்' தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படும் முன்னோடி நிகழ்ச்சித்திட்டமொன்றாக 12.86 மில்லியன் ரூபா செலவில் 04 பேரூந்துகளை கொள்வனவு செய்து இதற்காக வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |