• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊடக உரிமைகள் மற்றும் தர நிர்ணயம் தொடர்பில் பொது மக்களுடனான கலந்துரையாடலொன்றை ஆரம்பித்தல்
- ஊடக உரிமைகள் மற்றும் தர நிர்ணயம் தொடர்பில் பொது மக்களுடனான கலந்துரையாடலொன்றை ஆரம்பிப்பதற்கான பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதற்குரிய கருதுகோள் பத்திரம் சம்பந்தமாக சகல மக்கள் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் மாவட்ட மட்டத்தில் மக்களுக்கு அறிவிக்கும் செயற்பாடொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முன்னாள் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் அதிவணக்கத்திற்குரிய பௌத்த மதத் தலைவர்கள், பத்திரிகை சபை, இலங்கை செய்தி மேன்முறையீட்டு ஆணைக்குழு, தனியார் ஊடக நிறுவனங்களின் முகாமையாளர்கள் ஆகியோர்களுடன் கலந்துரையாடல்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளது. அவற்றின் போது முன்வைக்கப்பட்ட உரிய சகல விடயங்களையும் கவனத்திற்கு எடுத்து உத்தேச சட்டமூலம் வரையும் நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றதன.

இதற்கமைவாக, இது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு இரண்டு மாத காலத்திற்குள் உரிய சிபாரிசுகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்காக அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும் தற்போது சிவில் சமூக மற்றும் பகுதி அரசாங்க மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த செயற்பாடு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.