• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பட்டதாரிகளை அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்
- அமைச்சுக்கள், திணைக்களங்கள் உட்பட ஏனைய அரசாங்க நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் எதிர்பார்க்கப்படும் குறியிலக்குகளை அடையும் பொருட்டு பட்டதாரிகளின் சேவையை பெற்றுக் கொள்வது முக்கியமாவதோடு, விசேடமாக தரவுகள் மற்றும் தகவல்களை ஒன்று திரட்டுதல், அறிக்கைகளைத் தயாரித்தல் போன்ற பணிகளுக்கு அவர்களுடைய சேவை தேவைப்படும்.

ஆதலால் அந்தந்த அமைச்சுக்கள், திணைக்களங்கள் உட்பட ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய பதவியணித் தேவையானது முகாமைத்துவ சேவைகள் திணைக்ளத்தினால் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் இனங்காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஒருவருட பயிற்சி காலத்திற்கு உட்பட்டு பட்டதாரிகளை மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.