2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் - டிஜிட்டல்மயப்படுத்தலில் இணையத்தில் நுழையும் ஆற்றல் அதிகரித்துள்ளதன் காரணமாக இது ஆட்களின் வாழ்க்ககையில் கடும் தாக்கம் செலுத்தியுள்ளதோடு, முக்கியமாக வேலைகளில் ஈடுபடும் விதம், போக்குவரத்து, கற்கும் செயற்பாடுகள், சமூகமயப்படுத்தல் மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகள் இதன்கீழ் இனங்காணப்பட்டுள்ளது. அதேபோன்று நவீன பொருளாதாரத்தின் சகல பிரிவுகளிலும் டிஜிட்டல் பொருளாதாரமானது வியாபித்துள்ளதோடு, இதன் காரணமாக நாடு கடந்த சந்தைகள் துரிதமாக விரிவடைந்துள்ளமை, வர்த்தக நடவடிக்கை சம்பந்தமாக புத்தாக்க முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, விஞ்ஞான ரீதியிலான முன்னேற்றத்திற்குத் தேவையான பலம் கிடைத்துள்ளமை, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின்றமை, ஊழிய பயனுறுதியை விருத்தி செய்துள்ளமை, பொருளாதார விருத்தி கண்டுள்ளமை, என்பனவற்றின் வளர்ச்சியினைக் குறிப்பிடலாம். டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடான நடவடிக்கைகள் காரணமாக இந்தத் துறையில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தினை கண்டுள்ள போதிலும், இந்த நிலைமை இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றும் நோக்கத்தினை அடைவதற்கு போதுமானதாக இல்லை. ஆதலால், இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும் அதன் மூலம் எய்தப்படும் நலன்களை நாட்டின் சகலருக்கும் கிடைக்கக்கூடியவாறு அவர்களை பலப்படுத்தும் பொருட்டு மிக தௌிவான திறமுறையொன்றைத் தயாரிக்கும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சினாலும் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்தும் பொருட்டு பொருத்தமான திறமுறைகளைத் தயாரிப்பதற்கும் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |