2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெருந்தோட்ட வீடமைப்பு கருத்திட்டங்களின் கீழ் நிருமாணிக்கப்பட்ட வீடுகளுக்கு உரித்து உறுதிகளை வழங்குதல் - பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிருமாணிக்கும் பொருட்டு 2010 ஆம் ஆண்டிலிருந்து "நவ ஜீவன" வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் "ஹரித்த ரண்" வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, 2016 ஆம் ஆண்டுவரை முறையே இவற்றின் கீழ் 1,122 வீடுகளும் 1,742 வீடுகளும் நிருமாணிக்கப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. "ஹரித்த ரண்" வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேலும் 2,000 வீடுகளும் இந்திய உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு கருத்திட்டங்களின் மூலம் 1,134 வீடுகளும் நிருமாணிப்பதற்கு ஆரம்ப பணிகள் எடுக்கப்பட்டுள்ளன பொருந்தோட்ட மக்களுக்கு உயர் வாழ்க்கை நிலையுடன் வசதியாக வாழ்வதற்கு வீடுகளை நிருமாணிப்பதற்காக முறையான உரிமையுடன் 07 பேர்ச்சர்ஸ் வீதம் காணித் துண்டுகளை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையினால், 2010 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுவரை "நவ ஜீவன" வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் "ஹரித்த ரண்" வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் என்பனவற்றின் கீழ் நிருமாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ள வீடுகள் சார்பிலும் முறையான உரித்து உறுதிகளை வழங்கும் பொருட்டு மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |