2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மஹாபேரியதன்ன பண்ணைக் காணியில் குடியிருக்கும் தொழிலாளர் களுக்கு வீடுகளை அமைப்பதற்காக காணிகளை குறித்தொதுக்குதல் - பெருந்தோட்டங்களில் சேவை புரியும் ஊழியர்களுக்கு காணி உரிமையுடனான வீடொன்றை வழங்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக 2015 ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான மஹாபேரியதன்ன பண்ணையில் 210 தொழிலாளர்கள் நிரந்தரமாக குடியிருப்பதோடு, அவர்களுக்கு வீடுகளை நிருமாணிப்பதற்கு 07 பேர்ச்சர்ஸ் வீதம் காணித் துண்டுகளை வழங்குவதற்காக 12 ஏக்கர்களை குறித்தொதுக்கும் பொருட்டு தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் சபையினது அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கமைவாக, இந்த காணியை குறித்தொதுக்கும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்ச ரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |