• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆறாவது சார்க் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தை 2017 யூலை 27 - 29 ஆம் திகதிவரை கொழும்பில் நடாத்துதல்
- பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய அமைப்பின் உறுப்பு நாடுகளினது சுகாதார அமைச்சா்களினது மாநாடு 2017 யூலை மாதம் 27 - 29 ஆம் திகதிவரை கொழும்பில் நடாத்தப்படவுள்ளது. இங்கு வலயத்திலுள்ள நாடுகள் முகம் கொடுக்கும் பொது சவால்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடி எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பொருட்டு பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக உடன்பாடு காண முடியும். அதே போன்று, இந்த மாநாட்டிற்கு ஒருங்கிணைவாக சார்க் சுகாதார செயலாளர்களின், தொழினுட்ப குழுவின், சார்க் நிபுணர்கள் குழுவின் கூட்டங்கள் 2017 யூலை மாதம் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டின் அனுசரனையை இலங்கை ஏற்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.