• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திடீர் அனர்த்த நிலைமைகளின் போது துரிதமாக செயற்பட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரங்களைக் கையளித்தல்
- அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை கவனத்திற்கு எடுத்து கொண்டு, எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அனர்த்தத்திற்கு உள்ளாகுபவர்களை காப்பாற்றும் செயற்பாடு உட்பட துரித நிவாரணங்களை வழங்கும் சகல நிவாரண நடவடிக்கைகளை மிக பயனுள்ள வகையிலும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்காக பிரதேச செயலாளர்களினதும் இந்த அலுவலகங்களில் சேவையாற்றும் ஏனைய அமைச்சுக்களை சேர்ந்த உத்தியோகத்தர்களினதும் உரிய நிறுவனங்களினதும் உதவியை பெற்றுக் கொள்வதற்கும் அத்ததகைய சந்தர்ப்பங்களில் வினைத்திறனுடனும் சுயாதீனமாகவும் தேவையான பணிகளை நிறைவேற்றுவதற்கு உரியதான செலவுகளை ஏற்பதற்கும் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரத்தை கையளிப்பதனை தேசிய கொள்கையொன்றாக அங்கீகரிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.