2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொத்மலை மகாவலி மகாசேயவை மகாவலி கலாசார ஆதாரமன்ற நம்பிக்கை பொறுப்புக்கு உடைமையாக்குதல் - தற்போது நிருமாணிக்கப்பட்டுவரும் கொத்மலை மகாவலி மகாசேயவின் நிருமாணிப்பு பணிகளை பூர்த்தி செய்வதற்கும் மகாவலி மகாசேயவின் எதிர்கால பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் பௌத்த தர்மம், பௌத்த கலாச்சாரம் ஆகியவற்றின் அடையாளத்தை பாதுகாத்து பௌத்த சாசனத்தின் நிலைபேறான தன்மைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கிலும் மகாவலி கலாசார ஆதாரமன்ற நம்பிக்கை பொறுப்பு தாபிக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பின் நோக்கங்களை அடையும் பொருட்டு கொத்மலை, விக்டோரியா பிரதேசத்திலுள்ள ஏக்கர் 40 றூட் 03 பேர்ச்சர்ஸ் 31.6 விஸ்தீரணமுடைய அரசாங்க காணித்துண்டொன்றை தொல்பொருளியல் திணைக்களத்தின் சிபாரிசினைப் பெற்றுக் கொண்டு இறையிலி கொடையொன்றாக இந்த நம்பிக்கைப் பொறுப்பிற்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. |