• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்கா சருவதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்திற்கும் பங்களாதேஷ் வௌிநாட்டு சேவை கல்வி கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
- இலங்கையினதும் பங்களாதேஷினதும் இராஜதந்திர உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல் சம்பந்தமான தகவல்கள், நிபுணத்துவ அறிவு மற்றும் வளங்கள் என்பவற்றை பரிமாறிக்கொள்ளும் அத்துடன் உரிய செயற்பாடுகள், நிகழ்ச்சித்திட்டங்களில் கலந்து கொள்வதற்கு வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டும் பொருத்தமான கட்டமைப்பொன்றை தாபிக்கும் நோக்கில் இலங்கையின் பண்டாரநாயக்கா சருவதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்திற்கும் பங்களாதேஷ் வௌிநாட்டு சேவை கல்வி கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அதிமேதகைய சனாதிபதி அவர்கள் அண்மையில் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.