2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சருவதேச தொடர்புகள், திறமுறை கல்விக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்திற்கும் பங்களாதேஷ் சருவதேச மற்றும் திறமுறைக் கல்விக்கான நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல் - அனுபவம், நிபுணத்துவ அறிவு, ஆராய்ச்சி வௌியீடுகள் என்பவற்றை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதனையும் நீண்டகால, குறுகியகால அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களையும் நிபுணர்களையும் பரிமாறிக்கொள்வதனையும் பரஸ்பரம் அக்கறையுள்ள துறைகளில் கூட்டு ஆராய்ச்சிக் கருத்திட்டங்களை மேற்கொள்வதனையும் நோக்காக கொண்டு இலங்கை சருவதேச தொடர்புகள், திறமுறை கல்விக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்திற்கும் பங்களாதேஷ் சருவதேச மற்றும் திறமுறைக் கல்விக்கான நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் அதிமேதகைய சனாதிபதி அவர்கள் அண்மையில் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |