• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதயநோய் சிகிச்சைப் பிரிவொன்றை தாபித்தல்
- கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதான வைத்தியசாலை ஒன்றான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமன்றி அம்பாறை, திருகோணமலை ஆகிய அண்மைய மாவட்டங்களிலும் வசிக்கும் மக்களுக்கும் மூன்றாம் நிலை சிகிச்சை சேவைகள் வழங்கப்படுகின்றன. இருதய நோய் சிகிச்சைப் பிரிவொன்று இல்லாததன் காரணமாக உயர் இருதய நாள சிகிச்சைக்காக நோயாளிகளை தூர பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வேண்டி வருகின்றமையினால் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் இருதய நோய் சிகிச்சைப் பிரிவொன்றை தாபிப்பது அத்தியாவசியமானதென இனங்காணப்பட்டுள்ளது.

இந்த பிரிவை நிருமாணிப்பதற்கு பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு தேசிய ரீதியில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளதோடு இதற்காக 13 கேள்விதாரர்கள் முன்வந்துள்ளார்கள். இந்த கேள்விகளை மதிப்பிட்ட தொழினுட்ப மதிப்பீட்டு குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள M/s Ancheneye Constructions (Pvt) Ltd., கம்பனிக்கு உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.