2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முல்லேரியா, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் தேசிய பக்கவாத பிரிவொன்றைத் தாபித்தல் - 'பக்கவாதம்' என்பது முதியோர்கள் அங்கவீனமுறுவதற்கு பிரதான காரணமாய் அமைவதோடு, முறையான சிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு வசதிகளின் மூலம் இதனை சுகப்படுத்தலாம். தற்போது பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நவீன வசதிகள் கொண்ட சிகிச்சைப் பிரிவொன்று றாகமை மறுசீரமைப்பு வைத்தியசாலையில் மாத்திரம் உள்ளது. ஆதலால் பக்கவாத நோயாளர்கள் சார்பில் சிகிச்சை வசதிகளை விருத்தி செய்வதற்கு தேசிய பக்கவாத பிரிவொன்றை முல்லேரியா, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை நிருமாணிப்பதற்கு பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு தேசிய ரீதியில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, இதற்காக 09 கேள்விதாரர்கள் முன்வந்துள்ளார்கள். இந்த கேள்விகளை மதிப்பிட்ட தொழினுட்ப மதிப்பீட்டு குழுவினதும் அமைச்சர வையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள M/s RN Constructions (Pvt) Ltd., கம்பனிக்கு உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |