• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்காக நிருமாணிக்கப்பட்டுவரும் 10 மாடிகளைக் கொண்ட கட்டடத்தை 16 மாடிகளாக அதிகரித்தல்
- சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்காக 10 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றைக் 3,896.55 மில்லியன் ரூபா கொண்ட மதிப்பீட்டு தொகையின் கீழ் வடிவமைத்து, நிருமாணித்து, கையளிப்பதற்குரியதான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டதோடு, தற்போது குறித்த இந்த நிருமாணிப்பு பணிகளாவன நடைபெற்று வருகின்றன. உத்தேச கட்டடத்தில் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் உள்ள சகல பிரிவுகளுக்கும் தேவைப்படும் இடவசதிகளை வழங்குவதற்கு அதன் இடவசதி போதுமானதாக இல்லாமையினால், மேலும் 06 மாடிகளை புதிதாக சேர்த்து 16 மாடிகளாக கட்டடத்தை நிருமாணிப்பதற்கும் இதற்கமைவாக உரிய மதிப்பீட்டுத் தொகையை 3,896.55 மில்லியன் ரூபாவிலிருந்து 5,979.29 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கும் முன்னர் உடன்பட்டுள்ளவாறு வடிவமைத்து, நிருமாணித்து, கையளிக்கும் அடிப்படையில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.