2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஶ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலை சார்பில் புதிய தாதியர் விடுதியினை நிருமாணித்தல் - ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் சுமார் 750 தாதிமார் அடங்கிய பதவியணி ஒன்று நோயாளிகளுக்கான உபசரிப்பு சேவையை வழங்கி வருகின்றதோடு, இந்த தாதியர் பதவியணியில் 200 பேர்களுக்கு மாத்திரம் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. தாதியர் பதவியணியில் மேலும் சுமார் 300 பேர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்யும் விதத்தில் புதிய தாதியர் விடுதி ஒன்றை நிருமாணிப்பதற்கு தேசிய ரீதியில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்காக முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளை மதிப்பிட்ட தொழினுட்ப மதிப்பீட்டு குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள M/s Sripalie Contractors (Pvt) Ltd., கம்பனிக்கு உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|